நாட்டில் மிகப்பெரிய அளவில் சமூக கவலை தரும் பிரச்சனைக்காக போதை மருந்து பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் ஆகியிருப்பதற்கான காரணம் பூகோள பகுதிதான் காரணமா என்று திமுக எம்பி எஸ்.ஆர். ஜெயதுரை பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் அளித்த பதிலில் கூறியதாவது,இது மிகப்பெரிய கவலை தரும் பிரச்சனை தான். ஆனால், இன்னமும் புள்ளி விவர ரீதியாக நிருபணம் ஆகவில்லை. நாட்டின் மொத்தமுள்ள 120 கோடி பேரில் சுமார் 6 1/4 கோடி பேர் மது பயன்படுத்துபவர்களான உள்ளனர். அதில், சுமார் 17 சதவீதம் பேர் மட்டுமே அப்பழக்கத்திற்கு அடிமையானர்கள். இதுபற்றி ஐ.நா. அமைப்புகளுடன் இணைந்து ஆய்வு நடத்தப்படவில்லை.
நாட்டின் மக்கள் தொகையை கணக்கில் எடுத்து பார்க்கும்பொழுது இது மிகவும் குறைவாக இருப்பதால் ஆய்வுகள் மேலும் தொடர்கின்றன என்றார்.
மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை
“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)பார்வையில்




0 comments:
Post a Comment